Perambalur Collector appeals to everyone to give full cooperation to the projects implemented for the development of the district!

பெரம்பலூர் கலெக்டராக பொறுப்பேற்ற கொண்ட கற்பகம், செய்தியாளரை சந்திப்பில் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி கல்லுாரி கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!