Perambalur: Collector Karpagam inspection at children’s home!


பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இரண்டு பெற்றோர்களை இழந்த, ஒரு பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகளுக்கு வழ்ங்கப்படும் உணவின் தரம் குறித்தும், கல்வி மற்றும் உடல் நலன் குறித்தும் இல்ல நிர்வாகத்தினரிடமும், இல்லத்தில் இருந்த குழந்தைகளிடம் நீங்கள் இங்கு பாதுகாப்பாக உணர்கிறீர்களா எனவும், அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறதா என்பது குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!