Perambalur District, MCP at Nallur: Conducted by the Collector!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு) மஜீரா, நல்லூர் கிராமத்தில், வரும் பிப்.14 (புதன் கிழமை) அன்று கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, பெருமத்தூர் (வடக்கு) கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெருமத்தூர் (வடக்கு) கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்பே மனு அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.