Perambalur: People blocked the road demanding drinking water with empty Pots!

பெரம்பலூர் அருகே உள்ள து.களத்தூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் 6 வார்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வீட்டு இணைப்பில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் து.களத்தூர்- திருச்சி செல்லும் சாலையில் து.களத்தூர் ஊராட்சி அலுவலம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!