Perambalur Police S.P. registered whole body donation!
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாம் வாழும் வரை ரத்த தானம் வாழ்ந்த பின்பு உடல் தானம் என்ற நோக்கில் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் விழிப்புணர்வு வழங்கி குறைதீர் கூட்ட முகாமில், தனது இறப்பிற்கு பின்பு உடலை தானமாக வழங்குவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாமளா தேவி பதிவு செய்தார். உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் நா.ஜெயராமன், தொடர் குருதி கொடையாளர் க.மகேஸ்குமரன், உதிரம் நாகராஜ், ஆற்றும் கரங்கள் அருண் ஆபிரகாம் மற்றும் செவிலியர் அபிராமி ஆகியோர் உடனிருந்தனர்.