Perambalur Thambu Coffee Bar – 5th branch opening tomorrow at New Bus Stand!

பெரம்பலூரில் கடந்த சுமார் 23 ஆண்டுகளாக தம்பு காபி பார் `நிறுவனம் இயங்கி வருகிறது.

பெரம்பலூர் நகரில் காமராஜர் வளைவு , சங்கு சமீபம் ஐஓபி அருகிலும், வெங்கடேசபுரம் எஸ் பி ஐ வங்கி அருகிலும், நான்கு ரோடு சந்திப்பிலும், புதிய பேருந்து நிலையம் எதிரிலும் 5 ஐந்து கிளைகளுடன் வாடிக்கையாளர்கள் சிறப்பான ஆதரவு பெற்று இயங்கி வரும், தம்பு காபி பாரில், டீ, காபி, ஸ்நாக்ஸ் மற்றும் டீ வடை போண்டா, சம்சா போன்றவை தரமான எண்ணெய்யை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

சுடசுட ருசியும், மணத்துடன் வழங்குவதால் தம்பு காபி பார் பட்சணங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே தனி வரவேற்பு உண்டு. ஆர்டரின் பெயரில் அனைத்து விஷேசங்களுக்கும் உணவு வகைகள் செய்தும் கொடுத்தும் வருகின்றனர்.

கோபாலன் பால் நிலையம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பண்ணை பாலையும் வினியோகம் செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே ஒரு கிளை இயங்கி வருகிறது. தற்போது அதன் அருகே வள்ளலார் காம்பளக்சில் மேலும், புதிய கிளையின் திறப்பு விழா நாளை (டிச.15) வெள்ளிக் கிழமை நடக்கிறது. இது தம்பு காபி பாரின் 5வது காபி பார் ஆகும்.

புதிய கிளையில், இஞ்சி டீ, பில்டர் காபி, லெமன் ஹனி டீ, வெஜ் மோமஸ், வெஜ் சாண்ட்வெஜ், பாதம் பால், ரோஸ் மில்க் வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

நாளை நடக்கும் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தம்பு ரெஸ்டாரண்ட்ஸ்-சின் உரிமையாளர் ஆர். பாலாஜி, சுமதி பாலாஜி, திவ்யலட்சுமி, கோகுல் மற்றும் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

நாளைய திறப்பு விழாவில் வாடிக்கையாளர்கள் திரளாக வருகை புரிந்து, வாழ்த்த தொடர்ந்து நல் ஆதரவு கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என தம்பு ரெஸ்டாரண்ட்ஸ் உரிமையாளர் ஆர்.பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!