Perambalur: The death of a teenager suffering from a mysterious fever: the health department is investigating!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தில் உள்ள ராயப்பா நகரில் வசித்து வந்த முத்துசாமி மகன் கார்த்திக் (34), என்ற வாலிபர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு சென்ற போது இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் உயிரிழந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கார்த்திக்கின் மனைவி தேவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளாற்றில் கழிவு நீர் கலப்பதாலேயே ஊருக்குள் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிற நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான பதட்டம் நிலவி வருவதால் சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.