Perambalur: The sub-inspector who attended the political party function as the special guest and gave the gift was suspended!!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் ஸ்டேசனில் எஸ்.எஸ்.ஐ-யாக பணிபுரிந்து வருபவர் செங்கதிர் செல்வன். இவருக்கு சொந்த ஊர் தேனூர் , அங்கு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள் தேனூரில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சப்- இன்ஸ்பெக்டர் செங்கதிர் செல்வன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

அரசு பணியில் உள்ளவர்கள் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செங்கதிர் செல்வன் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சியாமளாதேவி தனிப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தி, செங்கதிர் செல்வனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!