Perambalur: The sub-inspector who attended the political party function as the special guest and gave the gift was suspended!!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் ஸ்டேசனில் எஸ்.எஸ்.ஐ-யாக பணிபுரிந்து வருபவர் செங்கதிர் செல்வன். இவருக்கு சொந்த ஊர் தேனூர் , அங்கு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள் தேனூரில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சப்- இன்ஸ்பெக்டர் செங்கதிர் செல்வன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

அரசு பணியில் உள்ளவர்கள் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செங்கதிர் செல்வன் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சியாமளாதேவி தனிப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தி, செங்கதிர் செல்வனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!