Pongal Festival for the first time at Perambalur Court!
பெரம்பலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட அமர்வு நீதிபதி (பொ) எஸ். மலர்விழி தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான .ஜி.கருணாநிதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கிரி, நீதித்துறை நடுவர்கள் ஜி.அசோக்பிரசாத், பி.கருப்பசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், தலைமை நிர்வாக அலுவலர் எஸ். விஜயகுமாரி, நீதிமன்ற மேலாளர் எம். தனலெட்சுமி, சிரஸ்தார் என். வீரவிஜயன், தலைமை எழுத்தர்கள் ஜி. துரை, மு.பெரியயசாமி, ஆh;. ராஜேந்திரன், கே. ராஜா, நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுப்ரமணியன், செயலாளர் . டி.செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.ரமேஷ், மாநில சட்டப்பணி ஆணைக்குபு நிர்வாக அலுவலர் டி.வெள்ளைச்சாமி, வழக்கறிஞர்கள் எஸ். மணிவண்ணன், காமராஜ், வேலுசாமி இதர வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பிடத்தக்க அம்சமாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.