Poultry Vaccination Vaccine on behalf of the Department of Animal Husbandry: Announced by District Collector

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் பணி இருவார முகாம் ( Special fortnight camp for RDVK vaccination ) நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 09.02.2020 முதல் 22.02.2020 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு ஊசிப்பணி முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது, எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!