Pouring milk on the ground, before the peasant uprising perambalur Collector’s Office
#பெரம்பலூர் :பால் கொள்முதல் செய்யப்பட்டதற்கு உரிய பணத்தை பட்டுவாடா செய்யக் கோரி விவசாய சங்கத்தினர் தரையில் கொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
விவசாயிகள் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று பெரம்பலூர் மவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கறந்த பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வறட்சியால் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொண்டப்பாடி பால் ஊற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான உரிய தொகை வழங்காமல் அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன், அந்த சங்கத்தில் முறைகேடு நடந்து வருவதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், வறட்சி மாநிலமாக அறிவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.