Prime Minister’s Scholarship Scheme for Young Achievers: Perambalur Collector Info!

இளம் சாதனையாளருக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National scholarship portal) விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

2023-2024 ஆம் ஆண்டிற்கு https://scholarship.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 இலட்சம் ஆகும். 31.12.2023 இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 15.01.2024 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாளாகும்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் பயனடைந்த மாணவ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National scholarship portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவி தொகையானது வழங்கப்படும்.

எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் மாணவ / மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National scholarship Portal ) New Registration என்ற இணைப்பில் (Link) சென்று தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறும் பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின்கீழ் பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National scholarship portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களை பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இவ்வாறு தெரிவித்துள்ளார்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!