Public demand to take action to remove encroachment of rainwater catchment of Perambalur forest department!
பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் பிரிவு சாலை அருகே தோட்டக் கலைத் துறையின் சார்பில் சிப்பம் கட்டும் அறை கட்டப்பட்டு வருகிறது. அதற்காக, சாலையின் வடபுறம் செல்லும் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்காலை முழுவதுமாக மண்ணால் தூற்றி பாதை அமைத்துள்ளது. இதனால், மழை நீர் அருகில் உள்ள குட்டைக்கு செல்வதற்கு பதிலாக தடம் மாறி சென்று வயல்வெளி பகுதியை சேதப்படுத்தும், அதோடு, மழைநீரும் தேங்கி நிற்கும். எனவே, வாய்க்கால் வழியாக வழிந்து ஓடும் வகையில் பாலம் அமைத்து தோட்டக் கலைத் துறையினர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.