Public grievance redressal camp related to food supply: Perambalur Collector notification!

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், லாடபுரம் (கி) கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி (கி) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சா.சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்புலியூர்(தெ) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சு.சத்தியபால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், சிறுகன்பூர் கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) அ.சோபா தலைமையிலும் 08.04.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!