Rain Shower with cool air in Courtallam started the season! Allowed to bathe in the waterfall !!
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களை கட்டத் தொடங்கியது, தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால், குளுகுளு காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது: ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் கொட்டத் தொடங்கி உள்ளது, இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது போன்று, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.