Regarding the prevalence of free training camp for chickens

நாமக்கல் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நாமக்கல் திருச்சி ரோடு கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், பண்ணையாளர்களுக்கான மழைக்காலத்தில் நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நோய் பாதிப்புகளை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் குறித்து இலவச பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் விருப்பமுள்ள பண்ணையாளர்கள், விவசாயிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!