Rs.366 Crore drinking water project for Perambalur Municipality and Padalur, Eraiyur SOPCOT’s! DMK members burst firecrackers and gave sweets to celebrate!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் சிப்காட், பெரம்பலூர் நகராட்சி மற்றும் கோத்தாரி – பீனிக்ஸ் தொழிற்பூங்காவிற்காக ரூ.366 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை கொண்டாடும் வகையிலும், அவருக்கு நன்றி தெரிவித்தும், மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார்,வீ.ஜெகதீசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல் பாரூக், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் தலைவர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், நகர துணை செயலாளர் சபியுல்லா, நகர பொருளாளர் ந.முத்துக்குமார், நகராட்சி துணைத் தலைவர் து.ஹரிபாஸ்கர், நகராட்சி உறுப்பினர்கள் ரகமத்துல்லா, சித்தார்த்,நல்லுசாமி,சேகர்,
மணிவேல், தங்க.சண்முகசுந்தரம், மற்றும் மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வழக்கறிஞர் கண்ணன், தங்கமயில்.செந்தில், மகேந்திரன், பாலாஜி, பரிதி(எ)நீலமேகம், அஜீத்(எ) ரோஹித் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!