Perambalur Collector Presents Shields to Best Women Entrepreneurs!

பெரம்பலூரில், ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2022-2023 ஆம் ஆண்டின் சிறந்த தொழில் முனைவோர்க்களுக்கான கேடயத்தை 5 பெண் தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார். தொழில் தொடங்க பயிற்சி முடித்தவர்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல துணை பொது மேலாளர் கோடிஸ்வர ராவ், ஆர்.பி.ஐ துணை பொது மேலாளர் ஸ்ரீதர் , முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மகளிர் திட்ட இயக்குனர் கருப்புசாமி, நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக் , மாவட்ட தாட்கோ மேலாளர் சுந்தரம் , பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!