Special bank loan camp to benefit the public of Perambalur district: Collector information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.02.2024 அன்று மாலை 4.00 மணியளவில் வங்கிக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறானளிகள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே அரசுத்துறைகளின் திட்டங்கள் மூலம் கடனுதவிகள் பெற விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் -621212 ஐ நேரடியாகவோ அல்லது 8925533976 தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என கலெக்டர் கற்பகம், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!