Tamil Nadu Chief Minister’s Breakfast Program: Inaugurated by MLA Prabhakaran in Perambalur!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருக்குவளையில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தில் காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ பிரபாகரன் மாணவர்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், டிஆர்ஓ. வடிவேல் பிரபு, ஆர்டிஓ நிறைமதி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மகாதேவி ஜெயபால், தழுதாழை பாஸ்கர், சோமு மதியழகன், பெரம்பலூர் பிடிஓ அறிவழகன், ஒன்றிய துணை சேர்மன் தேவிகுமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெகதீசன், கல்பாடி ஊராட்சி தலைவர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் காமராஜ், வேப்பந்தட்டை சேர்மன் ராமலிங்கம், திமுக கிளை நிர்வாகிகள் எஸ்.ஆர்.டி. ராமலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!