Tender Opening for Tasmac Liquor Shop Bars for Perambalur – Ariyalur Districts!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான மதுபான கடைகளுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி கலெக்டர் கற்பகம் முன்னிலையில் திறக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 26 மதுபான கூடத்திற்கும், அரியலூர் மாவட்டத்திற்கு 47 மதுபானக்கூடத்திற்கும் என மொத்தம் 73 மதுபான கூடங்களுக்கு இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி(Technical Bid) திறக்கப்பட்டது. நாளை காலை 11 மணியளவில் விலைப்புள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்விற்காக காவல்துறையின் சார்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின்போது, டாஸ்மாக் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!