THE PEOPLE OP V.Keeranur Complained to the Minister Against Kunnam Tehsildar!
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான சிவசங்கரிடம், வ.கீரனூர் கிராமத்தை பொதுமக்கள் கொடுத்த மனுவின் விவரம்:
பெரம்பலூர் மாவட்டம், வ.கீரனூர் கிராமத்தில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக சிலர் நீர்நிலைகள், நீர்வழிப்பாதை மற்றும் பொது சாலைகளை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதை நில அளவை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி 27.10.2023 – அன்று கொடுத்த மனு மீது குன்னம் வட்டாட்சியர் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வயலப்பாடி பஞ்சாயத்து பிரதிகள் தங்கள் பகுதியைப் புறக்கணித்து வருவதாகவும், மேலும், இரா.பழனிமுத்து, சு.ஆறுமுகம், பெருமாள், வையாபுரி கெங்காசலம் உட்பட பொது மக்கள் பலர் அமைச்சரிடம் மனு அளித்தனர். அதில் மேலும், கக்கன்ஜீ நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக உள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பான கழிவறை வசதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தனர்.