Vacancies in Perambalur District Legal Services Commission: Justice A. Balkies announcement!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ஏ. பல்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள லீகல் எய்டு டிபென்ஸ் கவுன்சில் சிஸ்டம் அலுவலகத்தில் உள்ள – காலிப் பணியிடங்களுக்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது குறித்த அனைத்து விரிவான விபரங்கள் விண்ணப்பங்கள் தகவல்களை https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 17.03.2023-ஆம் தேதி அன்று மாலை 05.00-மணிக்குள் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!