Veppanthattai Union Office, which is turning into a den of monkeys; Public fear!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள யூனியன் அலுவலகம் குரங்குகளின் கூடாரமாக மாறி வருவதால், குரங்கு மற்றும் அதன் குட்டிகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு வருவொரை மிரட்டுவதும், கடிக்க பாய்ச்சல் கொடுப்பது, பைக் உள்ளிட்ட வண்டி டேங் கவர்களை பிரித்து திண்பண்டங்கள் இருக்கிறதா என பார்த்து விட்டு, உள்ளே உள்ள பொருட்களை கடித்து வீசி எறிவது போன்ற அட்டகாசங்களை செய்கிறது. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை குரங்குகளை அச்சுத்துறுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குரங்கு கூட்டத்தை அப்புறப்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.