Volleyball tournament in Perambalur; Police S.P. initiated!

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில் இரு நாட்கள், ஆண்கள் , பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் போட்டிகளை பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஷியாமளாதேவி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், வாலிபால் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், டாக்டர் எஸ்.செங்குட்டுவன், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், வாலிபால் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அதியமான், வாலிபால் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்கள் து.ஹரிபாஸ்கர், இணைச் செயலாளர்கள் க.சிவராஜ், ஆர்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் நாளில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 42 அணியினர் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!