Woman killed in bike accident near Perambalur! Another one is hurt!!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் ராஜா மனைவி பார்வதி (42), இன்று காலை சுமார் 8.30 மணியளவில், குரும்பலூரில் செல்லும் துறையூர் – பெரம்பலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, துறையூரில் இருந்து, பெரம்பலூரை நோக்கி பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தை நல்லத்தம்பி (19) என்பவர் வந்த பைக் பார்வதி மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பார்வதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்து விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.